முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 23, 2017

பிளஸ்-2 தேர்வு முறையில் அதிரடி மாற்றம்!!

No comments :
பிளஸ்-தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ்-தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 200 மதிப்பெண் வழங்கப்பட்டு வருகிறது. இதை 100 மதிப் பெண்ணாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி பாடத்துக்கான மொத்த மதிப்பெண் 1,200-க்கு பதிலாக இனி 600 ஆக இருக்கும்.

இந்த 100 மார்க்குகளில் 90 மதிப்பெண் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மீதியுள்ள 10 மதிப்பெண் பொது அறிவு சம்பந்தமானது. ஆப்ஜெக்டிவ்’ டைப்பில் கேள்விகள் இருக்கும். 

நீட் மற்றும் தகுதி தேர்வில் மாணவ- மாணவிகளின் தகுதி திறனை அதிகரித்துக் கொள்ள இந்த 10 மதிப்பெண் பாடப் புத்தகத்தில் இல்லாமல் வெளியில் இருந்து பொது அறிவாக கேட்கப்படும்.பிளஸ்-2வில் உள்ள தேர்வு முறை போல பிளஸ்-1  தேர்விலும் பின்பற்றப்படும்.




மதிப்பெண் 100 ஆக குறைக்கப்படும் போது மாணவ - மாணவிகளுக்கு மன அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.

மார்க்குகள் பாதியாக குறைக்கப்படுவது போல தேர்வு நேரத்தையும் குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பிளஸ்-2 தேர்வு நேரம் 3 மணி என்பது இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட இருக்கிறது.

மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய இரண்டு வகுப்புகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கவும் பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. கல்லூரிகளில் 3 ஆண்டுகளில் மதிப்பெண்ணை சேர்த்து ஒரே சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதே முறையை மேல்நிலைப் பள்ளிகளில் பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளில் உள்ள மார்க்குகள் கணக்கிடப்பட்டு ஒரே மதிப்பெண் சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)