முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 24, 2017

குரூப் 2 ஏ தேர்வு, விண்ணப்பிக்க கடைசி நாள் மே-26!!

No comments :

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 27ந் தேதி முதல் மே 26ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முக தேர்வு இல்லாத டிஎன்பிஎஸ்சி குரூப் ஏ தேர்வுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி 41 துறைகளில் 1953 காலிப்பணியிடங்களுக்கான தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தனி எழுத்தர்பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் மனை வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.




தேர்வுக்கட்டணத்தை மே 29ம் தேதி வரை தபால் அல்லது வங்கி அலுவலகங்கள் மூலம் செலுத்தலாம். மேலும் கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பப்படிவங்களை தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குரூப் 2ஏ தேர்விற்கு இணையதள வழியாக விண்ணப்பிக்கவும். மேலும் குரூப் 2ஏ தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது.

குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக பணியில் நியமிக்கப்படுவர். எனவே மற்ற டிஎன்பிஎஸ்இ தேர்வுகளை விட இதற்கு அதிகமான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பார்கள்..

தனி எழுத்தர், பல்வேறு துறைகளில் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்முகத் தேர்வு இல்லாத குரூப் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்கள்தான் இருக்கிறது.

உடனே விண்ணப்பியுங்கள் உங்கள் அரசு வேலை கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள்.


வாழ்த்துக்களுடன் உங்கள் முகவை முரசு!!


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)