முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, June 6, 2017

அரசு தங்கும் விடுதிகளில் சேர ஜூலை 15ம் தேதிக்குள் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தங்கும் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் நடராஜன் கூறியுள்ளதாவது:
மாவட்டத்தில் பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர்சீர்மரபினர்சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக 33 மாணவர் விடுதிகளும், 22 மாணவியர் விடுதிகளும்கல்லூரி செல்லும் இளைஞர்களுக்காக மாணவர் விடுதிகளும், 5 மாணவியர் விடுதிகளும் என மொத்தம் 64 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 
பள்ளி விடுதிகளில் முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவமாணவியரும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்புபட்டமேற்படிப்புபாலிடெக்னிக்ஐ.டி.ஐ படிப்புகளில் பயிலும் மாணவமாணவியர் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பிற்பட்டோர்மிகவும் பிற்பட்டோர்சீர்மரபினர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச்  சேர்ந்த மாணவமாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். 
     
அனைத்து விடுதி மாணவமாணவியருக்கும் உணவுதங்கும் வசதி அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவமாணவியருக்குச் சீருடைகள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் பயிலும் மாணவமாணவியருக்குச் சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேர்வதற்கு பெற்றோர்பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். 



இந்த தூர விதி மாணவியருக்குப் பொருத்தாது. தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடமிருந்தோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 20ம் தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகளைப் பொருத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கும்பொழுது விண்ணப்பத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை. 

தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  மாணவ, மாணவியர் அரசின் இச்சலுகைகளைப் பெற்று பயனடையலாம்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)