முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, July 1, 2017

கீழக்கரை பேருந்து நிலையத்தில் பாதுகாவல் கோரும் பொது ஜனம்!!

No comments :
கீழக்கரை நகரில் உள்ள புதிய பஸ்ஸ்டாண்ட் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளால், வழித்தடம் குறுகிய நிலையில் உள்ளது. 

பஸ்ஸ்டாண்ட் காம்பவுண்ட் சுவருக்கு வெளியே நகராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த டிராக்டர் மற்றும் தனியார் நிறுவனத்தின் தளவாடப்பொருட்கள் கொட்டி வைக்கும் இடமாக உள்ளது. 

பஸ்கள் உள்ளே செல்லும் வழியில் கான்கிரீட் சிமென்ட் கட்டட கழிவு, கொட்டப்பட்டுள்ளதால், டூவீலர் மற்றும் நடந்து செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். காலை முதல் நள்ளிரவு வரை குடிமகன்கள் திறந்த வெளியாக பஸ் ஸ்டாண்டை பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்து ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் நின்று, பஸ் ஏறி செல்கின்றனர்.

எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும், போலீசார் இணைந்து குறைகளை நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: தினமலர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)