முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, November 27, 2017

கீழக்கரைக்கு நேரடி பஸ் வசதி கோரும் எக்குடி ஊராட்சி மக்கள்!!

No comments :

ராமநாதபுர மாவட்டம், எக்ககுடி ஊராட்சியில்
4 ஆயிரத்து 200 பேர் வசித்து வருகின்றனர். முன்னர் ராமநாதபுரம் தாலுகாவில் இருந்த எக்ககுடி, நல்லிருக்கை, மாலங்குடி, பனைக்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் 12 கி.மீ., தொலைவில் உள்ளராமநாதபுரம் தாலுகா அலுவலகம் சென்று வந்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்ட கீழக்கரையுடன் இணைக்கப்பட்டதால், பஸ்வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர்.ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள 6க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கீழக்கரை தாலுகாவில் 26 வருவாய் கிராமங்களாக சேர்க்கப்பட்டதில்,சான்றிதழ் மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்காக கீழக்கரைக்கு செல்ல வேண்டியுள்ளது.




கீழக்கரைக்கு நேரடியாக பஸ்வசதி இல்லாததால், 12 கி.மீ., தொலைவிற்கு ராமநாதபுரம் வந்து, அங்கிருந்து 17 கி.மீ., தொலைவிற்கு வேறு பஸ்சில் செல்லவேண்டியுள்ளதால், கூடுதல் நேரமும், பணவிரயமும் ஏற்படுகிறது.

எனவே எக்ககுடி, களரி, சுமைதாங்கி, கும்பிடுமதுரை வழியாக கீழக்கரைக்கு சென்றால் 10 கி.மீ.,யில் அடையலாம். எனவே மாவட்ட நிர்வாகம், புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கினால், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 30 கிராம மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரில் கவனிக்க வேண்டுகிறோம்!!

செய்தி: திரு. தாஹிர், கீழை



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)