முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 11, 2017

கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டி முற்றுகை போராட்டம்!!

No comments :
கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் 25 பெண்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை புதிய பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால்மூடக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் தலைமையில் நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தில்லை ரஹ்மான் முன்னிலை வகித்தார். 



மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரன் பேசுகையில், கடந்த மே 25ம் தேதி முற்றுகை போராட்டம் அறிவித்தபோது, 4 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதிமொழி கொடுத்தனர். அதன்பின்னர் டாஸ்மாக் கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்காததால் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியுள்ளோம். இன்னும் 10 நாட்களுக்குள் கடைகளை மூடாவிட்டால், தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

போராட்டத்தில் மகளிர் அணியை சேர்ந்த 25 பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


செய்தி: திரு.தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வைகை நீரை மலர் துாவி வைகை நீரை வரவேற்றார் கலெக்டர்!!

No comments :
வைகை அணையில் இருந்து நிலத்தடி நீர் ஆதாரத்திற்கென திறக்கப்பட்ட தண்ணீர், தொடர்ந்து பார்த்திபனுார் மதகு அணை வழியாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கலெக்டர் நடராஜன் திறந்து வைத்தார். இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியை கருத்தில் கொண்டு டிச., 5 ல் முதல்வர், வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.

இதன் படி மாவட்ட பங்கீடான 12,400 கனஅடி நீர், முறையே முதல் 3 நாட்கள் 3 ஆயிரம் கனஅடி வீதமும், அடுத்தடுத்த நாட்களில் 2 ஆயிரம், 1000 மற்றும் 400 கனஅடி என திறக்கப்பட்டது. இது தொடர்ந்து
10 ம் தேதி வரை முறையாக திறக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த 2016 ஜன., மாதத்திற்கு பின் சுமார் 2ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டதால், எதிர்பார்த்த நாளில் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் ஆற்றில் மணல் கொள்ளை, கருவேல ஆக்கிரமிப்பு என தடுப்பாக உள்ளன.



இதனையடுத்து முதல்வர் நேற்று மீண்டும் இரண்டு மாவட்டங்களுக்கும் சேர்த்து, 1720 கனஅடி கூடுதலாக திறக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பார்த்திபனுார் மதகு அணையை தண்ணீர் வந்தடைந்தது. தொடர்ந்து நேற்று காலை 10:00 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன்,
ஷட்டர்களை திறந்து வைத்து மலர் துாவி வைகை நீரை வரவேற்றார்.

இதன் படி மதகுகளில் மொத்தமுள்ள 25 ஷட்டர்களில் 4 தவிர 21 ஷட்டர்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வேகமாக ராமநாதபுரம் செல்லும் வகையில் முறைப்படுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வைகை அணையில் இருந்து மொத்தம் 14,120 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், பார்த்திபனுாரில் இருந்து வினாடிக்கு 2,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
பரமக்குடி தாசில்தார் ஜெயமணி, பரமக்குடி கீழ்வைகை வடிநிலை கோட்ட செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் செய்யதுஹபீப் மற்றும் உதவி பொறியாளர் கார்த்திக், வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் மதுரைவீரன், செயல்தலைவர் பால்மரியதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)