முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, December 12, 2017

மேற்கு ரயில்வே வேலை வாய்ப்புகள்!!

No comments :


மேற்கு மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கையில் மொத்தம் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையானது 295 ஆகும்.

மேற்கு மத்திய இரயில்வே பணியிடம் கோட்டா ஆகும். மேற்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள  பணிகளாவன;

எலக்ட்ரிசியன் 61 பணியிடங்கள் பிட்டர் 30 பணியிடங்கள் வெல்டர் 17 பணியிடங்கள் 17 பெயிண்டர் 02 பணியிடங்கள் மாசன் பணியிடங்கள் 3 கார்பெண்டர் 01 பணி வேக்கசன் இன் கோட்டா 01 எலக்ட்ரானிக்ஸ் 05 பணியிடங்கள் கோட்டாவில் இன்ஜினியரிங் 40 பணியிடம் எல்கட்ரானிக்ஸ் 02 போஸ்ட் பிட்டர் 18 பணியிடங்கள் வெல்டர் 20 பணியிடங்கள் துகளாபாத் பணியிடங்கள் 136 எலக்டிரானிக்ஸ் 38 பணியிடங்கள் பிட்டர் 27 பணியிடங்கள் எலக்டிரானிக்ஸ் 20 பணியிடங்கள் வெல்டர் 12 பணியிடங்கள் டர்னர் 05 பணியிடங்கள் லேப் அஸிஸ்டெண்ட் 1 பணியிடங்கள் எலக்ட்ரானிக்ஸ் 20 பணியிடங்கள் பிளம்பர் 05 பணியிடங்கள் டிராப்ட்ஸ்மேன் 02



பணியிடங்கள் கல்வித்தகுதி: பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கிகரிக்கப்பட்ட கல்விநிறுவனத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : மேற்கு மத்திய இரயில்வேயில் வேலை வாய்ப்பு பெற 15 முதல் 23 வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம். விதிமுறைப்படி சம்பளத் தொகை பெறலாம்.

இந்திய இரயில்வேயில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில்
http://mponline.gov.in/portal/
அறிவிக்கையை முழுமையாக படிக்க வேண்டும். பணியிடத்தை தேர்வு செய்ய வேண்டும் .


கேட்ப்பட்டுள்ள விவரங்களை பிழையில்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும். டிசம்பர் 31, 2017 தேதிக்குள் விண்ணப்பிக்க இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைபடுத்தப்படாமல் வீணாகும் காவேரி குடிநீர் திட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க ரூ.617 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டது. அது முறைபடுத்தப்படாமல் உள்ளதால் பல ஊராட்சிகளில் தற்போதும் குடிநீர் பிரச்னை விசுவரூபம் எடுத்து வருகிறது.

ராமநாதபுரம் அருகே சத்திரக்குடி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீருக்காக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டும் கடந்த பல மாதங்களாக குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் உள்ளதால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தெருக்களில் பைப் வசதி இருந்தும் குடிநீர் முறையாக வருவது இல்லை. இருந்த குடிநீர் குழாய்களும் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளன. 


இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேல்நிலை தொட்டிக்கு செல்லும் பைப்புகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் தொட்டிக்கு குடிநீர் செல்வது கிடையாது. இதனால் கிராமமக்கள் பைப்புகளில் வழியும் குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.

குடிநீர் வாரியத்தினர் கிராம மக்களின் நலன் கருதி விரைவில் காவிரி கூட்டு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராமமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)