(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 7, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க வருகின்ற  பொங்கல்  பண்டிகையை   முன்னிட்டு  பொது விநியோகத் திட்ட நியாய விலைக் கடைகளில் அனைத்து  அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கும், காவலர், வனக்காவலர் மற்றும்  இலங்கை  தமிழ் அகதிகள்  குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக பச்சரிசி  1  கிலோ, 
சர்க்கரை  1 கிலோ,   
2  அடி  நீள கரும்பு, 
முந்திரி  20 கிராம், 
உலர்திராட்சை  20 கிராம் மற்றும்  ஏலக்காய்  5  கிராம் 

ஆகியவை  கொண்ட  பரிசுத்  தொகுப்பு இன்று(6-ந் தேதி) முதல்  வரும்  13-ந் தேதி வரை  வழங்கப்படும்.

ராமநாதபுரம்  மாவட்டத்தில்  மொத்தம்  3லட்சத்து 45ஆயிரத்து 272  குடும்ப  அட்டைதாரர்கள்  இதன் மூலம்  பயன்  பெறுவர்.   குடும்ப அட்டைதார்கள்  அனைவரும்  தவறாது  பொங்கல் பரிசுத்  தொகுப்பினை  பெற்று  பயனடைய கெட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

குடும்ப அட்டைதாரர்கள் நலன் கருதி 500  குடும்ப அட்டைகளுக்கு  அதிகமாக உள்ள நியாய விலைக் கடைகளில்  குடும்ப அட்டைகளைப் பிரித்து  சுழற்சி முறையில் தெரு  -  பகுதி  -  வார்டு வாரியாக  வழங்கப்பட  உள்ளதால்  குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய முறை வரும்பொழுது பொங்கல்  பரிசுத்  தொகுப்பினை  பெற்று  பயனடையலாம்.

மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். 


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment