(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 14, 2018

ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றதா 65 பேர் கைது!!

No comments :
ரயில்வேத்துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ரயில் மறியல் போராட்டத்திற்கு முயன்றதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 65 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். 

ரயில்வேத்துறையை தனியார்மயமாக்குவது, பணி ஓய்வு பெற்றவர்களை ரயில்வேத்துறையில் நியமிக்க எடுக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரயில் மறியல் முயற்சி நடைபெற்றது. 

திருச்சியிலிருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில் ராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு வந்தபோது ரயில் நிலையம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆதிரெத்தினம் தலைமையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கு டி.எஸ்.பி எஸ். நடராஜ் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார் 65 பேரை கைது செய்தனர். 

சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment