(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 19, 2018

கீழக்கரை புதிய தாலுகா அலுவலக கட்டிட பணி துவக்கம்!!

No comments :
கீழக்கரையை தனி தாலுகாவாக அரசு அறிவித்து 14.3.2015 முதல் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் ஒரு பகுதியிலும், மலேரியா மருத்துவமனையில் ஒரு பகுதியிலும் தாலுகா அலுவலகம் தனித்தனியாக வெவ்வேறு இடத்தில் செயல்பட்டு வருகிறது. 

இந்த தாலுகா அலுவலகத்தில் போதுமான இடவசதியில்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். 



புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 56 லட்சம் ஒதுக்கீடு செய்து ஒன்றரை வருடம் ஆகியும் பணிகள் துவங்கவில்லை என்றும் விரைந்து கட்டுமான பணியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோர்க்கையை தொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு பணி தொடங்குவதற்கு அமைச்சர் மணிகண்டன் அடிக்கல் நாட்டி கட்டிட பணியை தொடங்கி வைத்தார். 

இதில் கலெக்டர் நடராஜன், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment