(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 19, 2018

மண்டபம் முகாம் ரயில் நிலையத்தில் டிக்கெட் தட்டுப்பாடு; பயணிகள் அவதி!!

No comments :

மண்டபம் முகாம் ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழித்தடத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமேஸ்வரம்மதுரை இடையே காலைநண்பகல்மாலை என வேளைகளில் பயணிகள் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது மண்டபம் முகாம் சிறிய அளவிலான ரயில் நிலையமாக இருந்தது. அகல ரயில் பாதைக்காக பழைய ரயில் நிலையம் உடைக்கப்பட்டு புதிய ரயில்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

மண்டபம் முகாம் பகுதியில் மத்தியமாநில அரசு அலுவலகங்கள்பள்ளிகள்மருத்துவமனைகள்இலங்கை அகதிகளுக்கான சப்.கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளதால் தினமும் நூற்றுக்கனக்கான பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மண்டபம் முகாம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை வழித்தடத்தில் ராமநாதபுரம்சத்திரக்குடிபரமக்குடிதிருப்புவனம்மதுரை செல்வதற்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால் மண்டபம் முகாமிலிருந்து பரமக்குடி செல்வதற்கு மானாமதுரை டிக்கெட் எடுத்து பரமக்குடி உள்ளிட்ட சம்மந்தப்பட்ட ரயில்நிலையத்தில் இறங்க வேண்டிய உள்ளது. இதேபோல் மதுரைக்கு டிக்கெட் இல்லாததால் மானாமதுரைக்கு எடுத்தபிறகு அங்கு இறங்கி பயணிகள் மீண்டும் மதுரைக்கு டிக்கெட் வாங்க வேண்டியுள்ளது. 




சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் தேவையை கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்து மதுரை வழித்தடத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் டிக்கெட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மண்டபம் கேம்பை சத்தியேந்திரன் கூறுகையில், மண்டபம் முகாமிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்கு கூட மானாமதுரை டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. மதுரை செல்வதாக இருந்தால் மானாமதுரை வரையே டிக்கெட் கிடைக்கிறது. அதன்பிறகு மானாமதுரையில் இருந்து மதுரை செல்ல டிக்கெட் எடுக்க கவுன்டருக்கு சென்று திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டு விடுகிறது. தற்போது பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் போக வேண்டிய இடத்திற்கு டிக்கெட் எடுக்காமல் செல்லாத இடத்திற்கு கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டியுள்ள நிலை உள்ளதால் கடும் சிரமம் அடைந்து வருகிறோம் என்று கூறினார்.

மண்டபம் ரயில்நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுகுறித்து ஏற்கனவே புகார் வந்தது. ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியுள்ளோம். உயர் அதிகாரிகள்தான் விரைவில் முடிவு செய்து விரைவில் அனைத்து இடங்களுக்கும் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?

மண்டபம் கேம்பை அடுத்து எந்தவொரு ரயில்நிலையத்திலும் ரயில் அதிக நேரம் நிற்பது கிடையாது. மதுரை செல்லும் பயணிகள் உயரமான பிளாட்பாரம் காரணமாக ராமநாதபுரத்திலோ, பரமக்குடியிலோ அல்லது மானாமதுரையிலோ ரயிலை விட்டு இறங்கி டிக்கெட் எடுக்க முடியாத நிலையில் உள்ளனர். வயதான பயணிகளாக இருந்தால் வண்டியிலிருந்து இறங்கி டிக்கெட் கவுண்டருக்கு சென்று மீண்டும் அதே பெட்டியில் ஏறுவது என்பது சிரமமான ஒன்று. சம்மந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் பயணிகளின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்தி: தினகரன்


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment