(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 18, 2018

துபாயில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி!!

No comments :
துபாயில் இந்திய தொழிலாளர் வள மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த மையம் துபாயின் ஜுமைரா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் பிரச்சனைகள், குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், கிரிடிட் கார்டு உள்ளிட்ட பிரச்சனைகள், ஆதார் அட்டை விளக்கம், வாட் வரி தொடர்பான சந்தேகங்கள் உள்ளிட்டவைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கப்படும்.
இதில் பங்கேற்க விரும்புவோர் 800 46342 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.


இந்த வாய்ப்பை அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment