(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, March 7, 2018

இளையோர் மன்றத்தில் மாத உதவித்தொகையுடன் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திரா இளையோர் மன்றத்தில் மாத உதவித்தொகையுடன் சேவை செய்ய விரும்புவோர் இம்மாதம் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு நேரு யுவகேந்திரா அமைப்பின் துணை இயக்குநர் மு.சடாச்சரவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் நேரு யுவகேந்திரா இளையோர் மன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்புக்கு சமூகப் பணியில் தேசிய இளையோர் தொண்டராக சேவையாற்ற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.



வயது 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், கல்வித்தகுதி குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். மேல் கல்வி, கணினி அறிவு பெற்றவர்கள், பெண்கள், இளைஞர் மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாதம் ரூ.5 ஆயிரம் மதிப்பூதியமாகவும் வழங்கப்படும். 

ஆரோக்கியம், எழுத்தறிவு, சுகாதாரம், பாலினம் போன்ற சமூகப் பிரச்னைகளில் விழிப்புணர்வு உண்டாக்கும் பணிகளை அவரவர் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்வார்கள். விண்ணப்பிப்பவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இம்மாதம் 13 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

விண்ணப்பங்கள் மற்றும் மேலும் விபரங்களுக்கு
துணை இயக்குநர்,
நேருயுவ கேந்திரா,1-372,
பாரதிநகர்,
ராமநாதபுரம்


என்ற முகவரியிலும் தொலைபேசி எண் 04567-230937 மற்றும் 9585535722 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment