(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 19, 2018

திறந்தவெளி ’பார்” ஆகிப்போன ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட்!!

No comments :
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இரவில் திறந்தவெளி பாராக மாறுவதால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் முறையான பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. புதிய பஸ்ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்த பின் இதன் பயன்பாடு 90 சதவீதம் குறைந்துவிட்டது.

இதனால் பழைய பஸ்ஸ்டாண்ட் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருப்பதால், ரயில்களில் வரும் கிராமப்புற பயணிகள் இங்கிருந்து புறப்படும் டவுன் பஸ்களில் ஊர்களுக்கு சிரமம் இன்றி செல்ல முடிந்தது.

தற்போது, மிகக்குறைவான பஸ்களே பகலில் மட்டும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.


அரண்மனை மணிக்கூண்டு அருகே இருந்தே 90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுவதால், பழைய பஸ்ஸ்டாண்ட் பயனற்ற நிலையில்தான் உள்ளது. இருந்தாலும், அனைத்து பஸ்களும் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன.

திறந்த வெளி பார்:
இரவு 8:30 மணிக்கு மேல் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வருவதில்லை. பயணிகளும் செல்வதில்லை. இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால் குடிமகன்கள் கூட்டமாக அமர்ந்து திறந்தவெளி பாராகவே மாற்றிவிட்டனர்.

காலி பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். அவை உடைந்து பலரின் பாதங்களை பதம் பார்க்கிறது.

ஆம்னி பஸ்ஸ்டாண்ட்:
மேலும் பழைய பஸ்ஸ்டாண்ட் வளாகத்தை, இரவில் முழுமையாக ஆம்னி பஸ்ஸ்டாண்ட் ஆக மாற்றி விடுகின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இரவில் இங்கே நிறுத்தப்படுகின்றன. தற்போது பகலிலும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இங்கிருந்தே புறப்படுகின்றன.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment