(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 17, 2018

கீழக்கரையில் கஞ்சா விற்பனை; நடவடிக்கை கோரி எஸ்பி யிடம் மனு!!

No comments :
கீழக்கரையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கீழக்கரையை சேர்ந்த பொதுநல அமைப்புகள் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய கல்விசங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம், எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


மனுவில், கீழக்கரை பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. புதுகிழக்கு தெரு, முகம்மது காசீம் அப்பா தர்கா பகுதி, சிவகாமிபுரம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பகல் நேரங்களிலும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது.

மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து இந்த விற்பனை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தும் பயன் இல்லை. எஸ்பி நேரிடையாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.


செய்தி: தினகரன்
படம்: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment