(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, August 13, 2018

அஞ்சல் துறை வழங்கும் கல்வி உதவித்தொகை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

No comments :
மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இந்திய அஞ்சல் துறை ''தீனதயாள் ஸ்பார்ஸ் யோஜனா'' திட்டத்தை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தில் ஆண்டிற்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 6 -9ம் வகுப்புமாணவர்கள் பங்கேற்கலாம். கடைசியாக எழுதிய தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் அஞ்சல் தலை சேகரிப்பு கிளப் உறுப்பினராகவோ, அஞ்சல் தலை சேகரிப்புகணக்கு உள்ளவராகவோ இருத்தல் அவசியம். அஞ்சல் தலை சேகரிப்பு கிளப் அமைக்க பள்ளிகளில் மாணவர்களை ஒருங்கிணைத்து செயல் படலாம்.


இந்த கிளப் அஞ்சல்துறையுடன் இணைந்து அஞ்சல் தலை கண்காட்சி, வினாடி வினா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம். கடிதம் எழுதும் போட்டி, அஞ்சல் தலை வடிவமைத்தல் போட்டியில் பங்கேற்கலாம்.
அஞ்சல் தலை சேகரிப்பு கிளப் உறுப்பினராக உள்ள மாணவர்கள் மட்டும் உதவித்தொகை பெற ஆக.,16க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பின் எழுத்து வடிவ வினாடி வினா போட்டி ஆக.,28ல் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோர் அஞ்சல் தலை சேகரிப்பு குறித்த திட்டம்(ப்ராஜெக்ட்) சமர்பிக்க வேண்டும்.

இதில் தேர்வானால்மாதம் 500 ரூபாய் வீதம் ஆண்டிற்கு 6000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்.

விண்ணப்பங்களை,
அஞ்சலக கோட்டகண்காணிப்பாளர்,
ராமநாதபுரம் கோட்டம்,
ராமநாதபுரம். 623501

என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேணடும், என கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் தெரிவித்துள்ளார்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment