(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 14, 2018

ராமநாதபுர வாகன நெரிசலுக்கு விமோசனம் எப்போது?!!

No comments :


ராமநாதபுரத்தில் பார்க்கிங் வசதி இல்லாமல் புதிய கடைகள் திறக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி கொண்டே செல்வதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர். கடைகள், வணிக வளாகங்கள் துவங்கும்போது தேவையான பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு நடத்திய பின்புதான் நகராட்சி அனுமதியளிக்க வேண்டும். 


ஆனால் ராமநாதபுரத்தில் அக்ரகாரம் ரோடு, போஸ்ட் ஆபீஸ் தெரு, சாலைதெருக்களில் இதை ஆய்வு செய்யாமல் அதிகளவில் கடைகள் திறக்க அனுமதிப்பாக புகார் எழுந்துள்ளது. இதனால் கடைகளுக்கு வருபவர்கள் ரோட்டில்  பார்க்கிங் செய்கின்றனர். இதன் காரணமாக இந்த சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. 

சாலைகளை கடந்து செல்ல அதிக நேரம் ஆகிறது. எனவே புதிதாக திறக்கப்படும் நிறுவனங்கள் பார்க்கிங் வசதி செய்துள்ளனவா என ஆய்வு செய்த பின்பே அனுமதியளிக்க வேண்டும்; இதுவரை முறையாக  பார்க்கிங் வசதி செய்யாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என,
  நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


செய்தி: திரு. தாஹீர், கீழை

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment