(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, December 6, 2018

ஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை!!

No comments :
ராமநாதபுரம் அச்சடிப்பிரம்பு ஐந்திணை மரபணு பூங்காவில் எல்லா வசதிகளும் இருந்தும் எதுவும் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளன.

ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அச்சடிபிரம்பு கிராமத்தில் 10 ஏக்கரில் 7 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்
உருவாக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா தோட்டக்கலைத் துறை சார்பில் மூன்று ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பூங்கா நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் கட்டடத்தின் மேற்கூரை பெயர்ந்து அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பூங்கா நடைபாதையில் கற்கள் பெயர்ந்து, தண்ணீர் தேங்கி, பாசி படிந்துள்ளது. இதனால் கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது.
இங்கு அமைக்கபட்டிருக்கும் குடில்களின் மேற்கூரை சேதமடைந்து கந்தலாகிப் போனது. 

நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 15 ரூபாயும், சிறியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் மட்டும் மக்கள் இங்கு வருகிறார்கள்.

பல கோடி ரூபாய் செலவழித்து உருவாக்கப்பட்ட பூங்காவிற்கு பயணிகள் வருகையை அதிகப்படுத்த மக்களை கவரும் வகையில் பூங்காவை
சிரமைத்து, நவீனப்படுத்த வேண்டும், என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment