முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 28, 2018

தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!!

No comments :


தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 9 ஆகும்.

பணிவிவரங்கள்:

மேனேஜர் மார்கெட்டிங் 1 பணியிடம்
டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங்
3 பணியிடம்
அஸிஸ்டெண்ட் மேனேஜெர் மார்கெட்டிங்
3 பணியிடம்

மேனேஜெர் பினான்ஸ் 1 பணியிடம்
டெபுட்டி மேனேஜெர் பினான்ஸ்
1 பணியிடம்

சம்பளத் தொகை:
மேனேஜெர் மார்கெட்டிங் - ரூபாய்
61,900 டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங் - ரூபாய் 59,300 மேனேஜர் பினான்ஸ் - ரூபாய் 61,900 டெப்புட்டி மேனேஜெர் - 59,300


தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க வயது வரம்பு மேனேஜெர் மார்கெட்டிங் - 45 வயது டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங்- 40 வயது அஸிஸ்டெண்ட் மேனேஜர் மார்கெட்டிங்க 35 வயது மேனேஜர் பினான்ஸ்- 45 வயது

மேலாண்மை துறை பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவங்கள். மேனேஜெர் மார்கெட்டிங் 15 டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங் 10 அஸிஸ்டெண்ட் மேனேஜெர் மார்கெட்டிங் 7 பணியிடங்கள் மேனேஜெர் பினான்ஸ் 5 பணியிடங்கள் டெப்புட்டி மேனேஜர் பினான்ஸ் 2 பணியிடங்கள்

 

கல்வித் தகுதி: கல்வித் தகுதியாக எம்பிஏ மார்கெட்டிங், சிஏ பைனல், சிஎம்ஏ பைனல் போன்ற படிப்பை அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.

http://tancem.com/wp-content/uploads/2018/02/HRMS-41.pdf


(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமிப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. ராமநாதபுரத்துக்கு அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் வரும்போது கட்சி நிர்வாகிகள் கொடிகள்விளம்பர பிளக்ஸ் போர்டுகளை வரவேற்று புதிய பஸ் ஸ்டாண்டுபழைய பஸ் ஸ்டாண்டுபாரதி நகர் பகுதியில் வைக்க தொடங்கினர். தற்போது ரோமன் சர்ச்சாலை தெருகேணிக்கரை என அந்த பட்டியல் நீண்டு வருகிறது. ராமநாதபுரம் நகர் பகுதியை சேர்ந்த பள்ளிகல்லூரிகளின் பிளக்ஸ்போர்டுகள் நகரின் பல இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது. 

இதுதவிர தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கல்யாண மகாலில் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். சாலையை மறைத்து திருமண விளம்பர பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவே இரவு நேரத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சாலையோரத்தில் பிளக்ஸ்போர்டுகளும் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டுநர்கள் விழிபிதுங்கி உள்ளனர். சாலைதெரு பகுதியில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதால் சிறிய வாகனங்கள் வருவது தெரியாமல் வாகன ஓட்டுநர்கள் சிரமம் அடைகின்றனர். 




பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் போக்குவரத்து போலீசார் நகரில் உள்ள விளம்பர போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வாகன ஓட்டுநர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான நல்ல விசயங்களை தெரிவிக்கும் வழிகாட்டு பலகை இருக்கிறதோ இல்லையோ பொதுமக்களை தங்களின் பொருட்களை வாங்க தூண்டும் விளம்பர பலகைகள் இல்லாத இடமில்லை என்ற நிலை உருவாகி விட்டது. ஏற்கனவே பிளக்ஸ் போர்டுகளின் ஆபத்தை உணர்ந்து தமிழக அரசு 2003ல் பல சட்ட விதிகளை வகுத்துள்ளது. 

இருப்பினும் இந்த விதிகளை யாரும் பின்பற்றுவது கிடையாது. பெரிய அளவிலான போர்டுகள் சாலைகளை மறைக்கும் விதமாக நிறுவனங்கள் வைத்து விடுகின்றன. விளம்பர பலகை வைப்பதற்கு முன் போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அந்த விதிமுறையும் பின்பற்றப்படுவது கிடையாது. பெரிய வர்த்தக நிறுவனங்கள் உயர் அதிகாரிகளை வளைத்து இஷ்டம் போல் விளம்பர பலகைகளை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலான விளம்பர போர்டுகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நகரில் நினைத்த இடங்களில் எவ்வித அனுமதியின்றி பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்படுகின்றன. பலவித கலர்களில் வைக்கப்படும் இந்த போர்டுகளை பார்த்துக்கொண்டு பலர் வாகனங்களை இயக்குவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த பிளக்ஸ் போர்டுகளை வரைமுறைபடுத்தி தேவையான விசேஷங்களுக்கு மட்டும் அனுமதியுடன் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

நாளை தொடங்குகிறது பிளஸ் 2 தேர்வுகள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 15,862 மாணவர்கள் எழுதுகின்றனர்!!

No comments :
பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பள்ளி கல்வித்துறையின் மூலம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாளை (மார்ச் 1) பிளஸ் 2 தேர்வு தொடங்க உள்ளது.



ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 86 நபர்கள் கொண்ட கண்காணிப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட உள்ளது. தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டு விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நாளை தொடங்கும் பொதுதேர்வு வரும் ஏப்.6ம் தேதி வரை நடக்க உள்ளது.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)