முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, April 15, 2018

ராமநாதபுரம் நகரில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள்!!

No comments :

ராமநாதபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் காயாம்பு என்பவரின் மகன் வாசுதேவன்(வயது 48). நல்லிருக்கை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த ½ பவுன் தங்க நகையை திருடிச்சென்றுவிட்டனர். பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் நகைகள் அதிர்ஷ்டவசமாக தப்பின. இதுபற்றி தகவல் அறிந்த வாசுதேவன் ஸ்ரீரங்கத்தில் இருந்து திரும்பி வந்து ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



இதேபோல ராமநாதபுரம் மூலக்கொத்தளம் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் நடராஜன் என்பவரின் மகன் குமார்(50). இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் மர்ம நபர்கள் இவரின் கடையை உடைத்து உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ரூ.7,000த்தை திருடிச்சென்றுவிட்டனர்.

இதேபகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் முனியாண்டி மகன் நாகராஜன்(50). இவரின் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2,000 பணத்தினை திருடிச்சென்றுவிட்டனர். அடுத்தடுத்த கடைகளில் நள்ளிரவில் புகுந்த நபர்கள் பணத்தினை திருடிச்சென்றுள்ளனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர்கள் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)