முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, April 19, 2018

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 21 ஆம் தேதி வட்டார வாரியாக சுழற்சி முறையில் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைகள் மற்றும் மின்னணு குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம்,புகைப்படம் பதிவேற்றம் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது.



அதன்படி, மாவட்டத்தில் ராமநாதபுரம் வட்டத்தில் கழுகூரணி நகர், ராமேசுவரம் அங்கன்வாடி மையம், திருவாடானை வட்டத்தில் வரவணி, பரமக்குடி வட்டத்தில் வெங்கட்டன் குறிச்சி, முதுகுளத்தூர் நகர், கடலாடி வட்டத்தில் கொத்தங்குளம், கீழக்கரை வட்டத்தில் முடிமன்னார் கோட்டை, மாலங்குடி ஆகிய இடங்களில் பொது விநியோகத்திட்ட குறை தீர் கூட்டம் வரும் சனிக்கிழமை (ஏப்.21) காலை 10 மணியளவில் நடைபெறும்.


செய்தி: தினமணி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமேஸ்வரத்தில் 238 மதுபாட்டில்கள் பறிமுதல்; 5 பேர் கைது!!

No comments :
ராமேஸ்வரத்தில் கள்ளத்தனமாக விற்க கொண்டு வந்த 238 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைதாயினர்.

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாம்பனில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு தடை உள்ளது. ஆனால் பலர் பாம்பனில் இருந்து மதுபாட்டில்களை கள்ளத்தனமாக மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு ராமேஸ்வரம் பகுதியில் விற்று வருகின்றனர்.

குடியிருப்பு பகுதிகள், ராமநாதசுவாமி கோயில், ரயில்வே ஸ்டேஷன், கடற்கரை, துறைமுகம், பேருந்து நிலையம் என அனைத்து பகுதியிலும் குடிசைத்தொழில் போல் வீடுகள், கடைகளுக்குள் வைத்து மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது.


செல்போனில் தொடர்பு கொண்டால் உடன் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து, மதுபாட்டில்களை சப்ளை செய்யும் மொபைல் விற்பனையிலும்பலர் ஈடுபட்டு வருகின்றனர். பாட்டிலுக்கு ரூ.25 முதல் ரூ.100 வரை கூடுதல் விலை வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்கின்றனர்.

நேற்று முன்தினம் இரவில் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரம் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாம்பனில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கடத்தி வந்த 3 பேரை பிடித்தனர். இதுபோல் ராமேஸ்வரம் பத்ரகாளியம்மன் கோயில் சாலை பகுதியில் மது விற்பனை செய்த இருவரை பிடித்தனர்.

பிடிபட்ட களஞ்சியம்(36), நம்புவேல்(35), அலெக்ஸ்(25), பாலமுருகன் மற்றும் செல்லமுத்து ஆகியோரை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்த 238 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

திறந்தவெளி ’பார்” ஆகிப்போன ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட்!!

No comments :
ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இரவில் திறந்தவெளி பாராக மாறுவதால் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
ராமநாதபுரம் பழைய பஸ்ஸ்டாண்ட் முறையான பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. புதிய பஸ்ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்த பின் இதன் பயன்பாடு 90 சதவீதம் குறைந்துவிட்டது.

இதனால் பழைய பஸ்ஸ்டாண்ட் ரயில் நிலையத்திற்கு எதிரில் இருப்பதால், ரயில்களில் வரும் கிராமப்புற பயணிகள் இங்கிருந்து புறப்படும் டவுன் பஸ்களில் ஊர்களுக்கு சிரமம் இன்றி செல்ல முடிந்தது.

தற்போது, மிகக்குறைவான பஸ்களே பகலில் மட்டும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.


அரண்மனை மணிக்கூண்டு அருகே இருந்தே 90 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுவதால், பழைய பஸ்ஸ்டாண்ட் பயனற்ற நிலையில்தான் உள்ளது. இருந்தாலும், அனைத்து பஸ்களும் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன.

திறந்த வெளி பார்:
இரவு 8:30 மணிக்கு மேல் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வருவதில்லை. பயணிகளும் செல்வதில்லை. இதனை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இதனால் குடிமகன்கள் கூட்டமாக அமர்ந்து திறந்தவெளி பாராகவே மாற்றிவிட்டனர்.

காலி பாட்டில்களை துாக்கி வீசுகின்றனர். அவை உடைந்து பலரின் பாதங்களை பதம் பார்க்கிறது.

ஆம்னி பஸ்ஸ்டாண்ட்:
மேலும் பழைய பஸ்ஸ்டாண்ட் வளாகத்தை, இரவில் முழுமையாக ஆம்னி பஸ்ஸ்டாண்ட் ஆக மாற்றி விடுகின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இரவில் இங்கே நிறுத்தப்படுகின்றன. தற்போது பகலிலும் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இங்கிருந்தே புறப்படுகின்றன.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)