முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 25, 2018

108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆக-27ம் தேதி நேர் முகத்தேர்வு!!

No comments :


பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ஆக., 27அன்று 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளதாக, ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன் தெரிவித்தார்.



மருத்துவ உதவி யாளர்கள் பணிக்கு 19 வயதுக்கு மிகாமல் 30 வயதுக்குள்ளாகவும், ஓட்டுநர் பணிக்கு 24 வயதுக்கு மேல் 35 வயதுக்குள்இருக்கு வேண்டும். தகுதியான பட்டப்படிப்புகள் முடித்த சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம், அனுபவம் தொடர்பான சான்றிதழ்களுடன் வரவேண்டும்.


மேலதிக விபரங்களுக்கு 73977 24828, 98403 65462 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

அரசு மருத்துவமனையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

No comments :


ராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரண்மனை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு நிர்வாகி என்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், எம்.ராஜ்குமார், இ.கண்ணகி, தாலுகா செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டக்குழு என்.வெங்கடேஷ் பங்கேற்றனர்.



மருத்துவர்கள் காலை 7:30 முதல் பகல் 1:00 மணிவரை புற நோயாளிகள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவர் கவனக்குறைவால் ஏற்படும் மரணங்களுக்கு சட்டப் பூர்வ நடவடிக்கை, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், இரவு பணியில் கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

செய்தி: தினசரிகள்



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

திறந்த வெளி ”பாராக’ செயல்படுகிறது கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் பகுதி!!

No comments :
கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்படுவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கீழக்கரை பஸ் ஸ்டாண்ட், அம்மா உணவகம் பின்புறமுள்ள மீன் மார்க்கெட் பகுதிகள் திறந்த வெளி பாராக செயல்படுகிறது.



அதிகாலை 4 மணிக்கே கும்பலாக வரும் குடிமகன்களால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். குடித்துவிட்டு உடைத்தெறியும் பாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன.

திறந்தவெளியில் எவ்வித சங்கடமும் இன்றி குடிப்போரால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.


இதனை தடுக்க போலீசார் ரோந்து சுற்றிவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக பதவி ஏற்றுக்கொண்டார் திரு. வீரராகவராவ்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த திரு.நடராஜன் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக வீரராகவராவ் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பதவி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் முதல்–அமைச்சர் உத்தரவின்பேரில சிறப்பாக செயல்படுத்தப்படும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நகர் மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சி திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

தமிழகத்திலேயே மிக நீண்ட 237 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 42 ஆயிரத்து 500 மீனவ குடும்பங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. அவர்களுக்கான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும். மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் மூலம் தீர்வுகாணப்படும்.

மாவட்டத்தில் கல்வி சுகாதார பணிகள் விரைவுபடுத்தப்படும். இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. தண்ணீரை வினியோகிக்கும் முறையில் குளறுபடிகள் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குறைகள் விரைவில் சரிசெய்யப்படும். வைகை அணையில் இருந்து தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பேஸ்புக், வாட்ஸ்–அப் மூலம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க செயலி உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பொது மக்கள் பயன்பெற்றனர்.


அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திலும் உருவாக்கப்படும். மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சிதிட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, திட்ட அலுவலர் ஹெட்சிலீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த திரு.நடராஜன் மாற்றப்பட்டு,  புதிய கலெக்டராக வீரராகவராவ் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பதவி பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் முதல்–அமைச்சர் உத்தரவின்பேரில சிறப்பாக செயல்படுத்தப்படும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நகர் மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சி திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

தமிழகத்திலேயே மிக நீண்ட 237 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 42 ஆயிரத்து 500 மீனவ குடும்பங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. அவர்களுக்கான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும். மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் மூலம் தீர்வுகாணப்படும்.

மாவட்டத்தில் கல்வி சுகாதார பணிகள் விரைவுபடுத்தப்படும். இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. தண்ணீரை வினியோகிக்கும் முறையில் குளறுபடிகள் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குறைகள் விரைவில் சரிசெய்யப்படும். வைகை அணையில் இருந்து தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பேஸ்புக், வாட்ஸ்–அப் மூலம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க செயலி உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பொது மக்கள் பயன்பெற்றனர்.
அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திலும் உருவாக்கப்படும். மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சிதிட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, திட்ட அலுவலர் ஹெட்சிலீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)