(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 2, 2019

பாம்பன் ரெயில் பாலம் பழுது; ரெயில்கள் ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்!!

No comments :

பாம்பன் ரெயில் பாலம் பழுதாகி ராமேசுவரம் செல்லும் ரெயில்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே, ரூ.250 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்துள்ளதால், அந்த பாதையில் ரெயில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்த மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்தநிலையில், நாளை(வியாழக்கிழமை) முதல் வருகிற 5–ந் தேதி வரை மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் இரு மார்க்கங்களிலும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, மதுரை–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56723, 56722, 56725, 56724, 56721, 56726) ஆகிய பாசஞ்சர் ரெயில்கள் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
ராமேசுவரம்–கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22621) நாளை ஒரு நாள் மட்டும் மதுரை–ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி–ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22621/22622) வருகிற 5–ந் தேதி இருமார்க்கங்களிலும் மதுரை–ராமேசுவரம் வரை ரத்து செய்யப்படுகிறது.



ராமேசுவரம்–திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16779/16780) வருகிற 5–ந் தேதி மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.
திருச்சி–ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56829/56830) இரு மார்க்கங்களிலும் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படுகிறது.
அதேபோல, தண்டவாள பராமரிப்பு பணிக்காக மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56734/56735) நாளை(வியாழக்கிழமை) மற்றும் 5–ந் தேதி ஆகிய நாட்களில் இரு மார்க்கங்களிலும் விருதுநகர் ரெயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மதுரை–பழனி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56709/56710) நாளை, 4–ந் தேதி, 5–ந் தேதிகளில் இருமார்க்கங்களிலும் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment