(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, January 27, 2019

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தினவிழா!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்தார். முன்னதாக விழாவிற்கு வந்த மாவட்ட கலெக்டரை மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

விழாவில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றி 10 ஆண்டுகள் நிறைவு செய்த 62 போலீசாருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பதக்கங்களையும், 41 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 90 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.


அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 105 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 54 ஆயிரத்து 848 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளையும் கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார். சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் உள்ள மாவட்ட சவகர் சிறுவர் மன்றம், தமிழ்நாடு யோகாசன சங்கம் ஆகியவற்றை சார்ந்த 544 மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் 127 அரசு அலுவலர்களின் சேவைகளை பாராட்டி குடியரசு தினவிழாவில் கலெக்டர் வீரராகவராவ் பதக்கங்களையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment