(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, January 2, 2019

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை; மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியம்!!

No comments :
பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழகத்தில் முழுமையாக நேற்று முதல் அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றுப்பொருட்கள் உற்பத்திக்கு அரசு திட்டமிடாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இருந்தாலும் மாற்றம் மக்களிடம் ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக ஒழிப்பது சாத்தியம். அதற்கு அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும், மண்ணை மலடாக்கும், நீர் பிடிப்பு பாதிப்பு, புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற நோய்கள் பரவ காரணமாகியது. இதனால் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பாக்கெட்டுகள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் உணவுப்பொருட்கள் பேக்கிங், மேஜை விரிப்புகள், பிளாஸ்டிக் பூச்சு உள்ள பொருட்கள் அனைத்தும் ஆறு மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்டது.

மண்குவளைகள், பாக்குமட்டை தட்டுகள், துணிப்பைகள், சணலால் ஆன பைகள், ஓலைகளால் உருவாக்கப்படும் பெட்டிகள். மரங்களில் தயாரிக்கப்படும் சமையல் துடுப்பு, தயிர் மத்து, கரண்டிகள், கைப்பைகள், துணியால் ஆன மேஜை விரிப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தப்படுகின்றன. 

மக்களிடம் நீக்கமற நிறைந்த பிளாஸ்டிக் பொருட்களை ஒரே நாளில் நிறுத்திவிட முடியாது என்பதால் தான், அரசு 6 மாதங்களுக்கு முன்பாக தடை அறிவித்தது. மாற்றுப்பொருட்கள் உற்பத்தியோ போதுமான அளவில் இல்லை. மக்கள் மாற்றுப்பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். 



மக்கள் கேரி பேக்குக்கு பதிலாக துணிப்பபைக்கு மாறி வருகின்றனர். கடைகளில் துணிப்பைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதிகாரிகள் தரப்பில் துணிப்பையிலும் கலர் பைகள் விற்பனை செய்யக்கூடாது. கலர் சேர்க்கும் போது, அதில் உள்ள வேதிப்பொருட்களால் பாதிப்பு ஏற்படும் என்று அதற்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். 

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு சில வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு இருந்து வருகிறது. குறிப்பாக கேரி பேக்குகள், டம்ளர்கள், பூக்கடைகள், இறைச்சி கடைகள் முழுமையாக மாற்றம் பெறவில்லை என்பதே உண்மை. 

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது குறித்தும், மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துதல் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மகளிர் திட்டம் சார்பில் மாற்றுப்பொருட்கள் குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற மாற்றுப்பொருட்களை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 


அரசு எத்தனை தடை விதித்தாலும், அதனை பயன்படுத்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தின் மூலம் தான் முழுமையான தடையை அமல்படுத்த முடியும். மக்கள் பயன்பாடு குறைந்து மாற்றுப்பொருட்களுக்கு மாற வேண்டும். மாற்றத்தில் இருந்து தான் ஏற்றம் காண முடியும்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment