Thursday, February 21, 2019
பிப்ரவரி 23, 24ம் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க, நீக்க
மற்றும் திருத்தம் செய்திட பிப்ரவரி 23, 24 (சனி, ஞாயிற்றுகிழமைகள்)
ஆகிய இரண்டு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான
கொ.வீரராகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த ஜனவரியில்
வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியலும்
வெளியிடப்பட்டது.
அதன்படி பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், இளம் வாக்காளர்கள் மற்றும்
விடுபட்ட வாக்காளர்களை சேர்ப்பதற்காகவும், தற்போதுள்ள வாக்காளர்
பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்வதற்கும் பிப்ரவரி 23 (சனிக்கிழமை) மற்றும் 24
(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாள்களிலும் மாவட்டத்திலுள்ள
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)
No comments :
Post a Comment