(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, February 22, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் பிப்ரவரி 28 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. 

ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகளும் விவசாய சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கலாம்.

இதில் விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment