(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Friday, February 22, 2019

கீழக்கரை கடைகளில் தடைசெய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 5 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்!!

No comments :
கீழக்கரை நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளில் மீண்டும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள், கப்புகள் பயன்படுத்தப்படுவதாக நகராட்சி ஆணையர் தனலட்சுமிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.


இதையடுத்து ஆணையர் தலைமையிலான குழுவினர் வி.எஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடைகளின் உரிமையாளர்களுக்கு முதல்கட்டமாக ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


ஆய்வின் போது நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் பூபதி, நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment