(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 27, 2019

கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாக இளைஞர் கைது!!

No comments :
ஆந்திரத்தில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா கடத்திக் கொண்டு வந்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை எழும்பூருக்கு சர்கார் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை வந்தது. இந்த ரயிலில் வந்திறங்கிய பயணிகளை மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.


அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு பெரிய பையுடன் வந்த இளைஞரை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரம் மாவட்டம்  தொண்டி பகுதியைச் சேர்ந்த செ.பிரசன்னா (24) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வருவதும் தெரியவந்தது. | இதையடுத்து போலீஸார், பிரசன்னாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும் விசாரணையில், பிரசன்னா அந்த கஞ்சாவை ராஜமுந்திரியில் ரூ.40 ஆயிரத்துக்கு வாங்கியிருப்பதும், ராமநாதபுரத்தில் அதை ரூ.3 லட்சத்துக்கு விற்க திட்டமிட்டு ரயிலில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.


இது தொடர்பாக போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment