(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, August 3, 2019

ராமநாதபுரம் நகரில் போலி பீடி விற்பனை; 2 பேர் கைது!!

No comments :
ராமநாதபுரம் நகரில் போலீசார் சோதனையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் 28போலி பீடி பண்டல்களை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.



ராமநாதபுரம் நகரில் பிரபல பீடி நிறுவனம் பெயரை பயன்படுத்தி போலி பீடிகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகியான ஓம்சக்தி நகரை சேர்ந்த அப்துல் நஜீத் போலீஸ்உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட்அருகேயுள்ள கடையில் போலி பீடி கட்டுகள் இருப்பதாக புகார் அளித்தவரின் தகவலின் பேரில் போலீசார் அங்கு சோதனையிட்டனர். அப்போது 20 போலி பீடி பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக ஞானசேகரன் 42, என்பவரைபோலீசார் கைது செய்தனர். இதே போல் ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியில் உள்ள கடையிலும் 8 போலி பீடி பண்டல்களை கைப்பற்றி கடை உரிமையாளர் அப்துல் பாசித் 38, என்பவரை கைது செய்தனர். 

இந்த போலி பீடி பண்டல்களை ராமநாதபுரத்திற்கு வந்த கேரளாவை சேர்ந்தவரிடம் இருந்து வாங்கியதாக கைதானவர்கள் கூறியுள்ளனர். அதனடிப்படையில் போலீசார் போலி பீடியை ராமநாதபுரத்தில் விற்பனை செய்யும் கேரள நபர்களை பிடிக்க விசாரணையை துவக்கியுள்ளனர்.

செய்தி: தினசரிகள்


(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment