(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, August 21, 2019

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்ட்ர்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் யாரும் இடைத்தரகரை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பா.வீரராகவராவ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் மூலம் செயல்படு f ப்பட்டு வரும் பிரதமரின் "அனைவருக்கும் வீடு' திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், ராமேசுவரம், பரமக்குடி, கீழக்கரை ஆகிய நகராட்சிப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.



இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு, பயனாளிகளுக்கு வேறு எங்கும் கான்கிரீட் வீடுகள் இருக்கக் கூடாது. வீடு கட்டுவதற்கான இடத்தின் நில உரிமைக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரம் அல்லது பட்டா வைத்திருக்க வேண்டும் பயனாளியின் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளியின் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பின் பரப்பளவு குறைந்தது 300 சதுரடியிலிருந்து 500 சதுரடி வரை இருக்க வேண்டும். வீடு கட்டிக்கொள்ள மானியமாக ரூ.2.10 லட்சம் நான்கு நிலைகளில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் யாரும் இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

மேலும் விபரங்களுக்கு உதவி பொறியாளர்கள்
(ராமநாதபுரம்) 9443183194,
(கீழக்கரை) 6380654852,
(பரமக்குடி) 9488883638,
(ராமேசுவரம்) 9487390981


ஆகிய எண்க ளில் தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment