(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 12, 2019

ராமநாதபுரத்தில் செப்- 13 ஆம் தேதி மீனவர்கள் குறை தீர் கூட்டம்!!

No comments :

ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் கொ.வீரராகராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரத்தில் வரும் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.


மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட அரசுத் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.

ஆகவே, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள்பட்ட அனைத்து மீனவர்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து அதற்கான தீர்வினை பெறலாம்.


மேலும், மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment