(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, September 12, 2019

அரசு ஐ.டி.ஐ.,ல் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!!

No comments :
முதுகுளத்துார் அரசு ஐ.டி.ஐ.,ல் வெல்டர், இயந்திர வேலையாள் பிரிவு படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை செப்.,16 வரை நடக்கிறது.

இப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் 14 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஐ.டி.ஐ.,யில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி, பாடப்புத்தகம், வரைப்படக்கருவி, காலணிகள், பஸ்பாஸ் உள்பட அரசு வழக்கும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

தினமும் வேலைநாட்களில் காலை 9:00முதல் மாலை 5 வரை பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்,என்று முதல்வர் பொறுப்பு அசோகன் கூறினார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

No comments :

Post a Comment