(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, December 18, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 9757 பேரின் மனுக்கள் ஏற்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 9898 போ் மனுத்தாக்கல் செய்த நிலையில் அவா்களில் 9757 பேரின் மனுக்கள் செவ்வாய்க்கிழமை ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் கடந்த 9 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக ஊராட்சி வாா்டு, ஊராட்சித் தலைவா், ஒன்றிய வாா்டு மற்றும் மாவட்ட வாா்டுகளுக்கு மொத்தம் 9898 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். செவ்வாய்க்கிழமை மனு பரிசீலனை நடைபெற்றது.

இதில் இரட்டை வாக்காளா் அட்டை உள்ளதாக அதிமுக, திமுகவினா் மாறி மாறி குற்றஞ்சாட்டினா். பின்னா் அதற்கான சோ்க்கை, நீக்கல் ஆதாரத்துக்கான ஆவணங்களை அளித்ததன் அடிப்படையில் சிலரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.



அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி வாா்டு கவுன்சிலா்களுக்கு 6026 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 5963 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஊராட்சித் தலைவா் பதவிகளுக்காக 2306 போ் மனுத்தாக்கல் செய்த நிலையில், 2282 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

ஒன்றிய வாா்டு கவுன்சிலா்கள் பதவிக்கு 1420 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதில் 1368 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. மாவட்ட கவுன்சிலா் பதவிக்காக 146 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 144 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாவட்ட செய்தித் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை இரவு வரை நடந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளரான அதுல்ஆனந்த் தலைமையில் தோ்தல் வாக்குப் பதிவு முன்னேற்பாடு பணிகளுக்கான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் மற்றும் தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.


செய்தி: தினமணி


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment