முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, January 12, 2019

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் சுகாதார சீர்கேடு!!

No comments :
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் முறையாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் முறையாக அள்ளுவது கிடையாது. குப்பைகள் கொட்டப்படும் இடத்திற்கு அருகில் குடியிருப்பு வீடுகள், தபால் நிலையம், வங்கிகள், கடைகள் என பல உள்ளதால் அப்பகுதியில் சுற்றுப்புற சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.



தொட்டிகளில் சேரும் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பை தொட்டிகளுக்கு அருகிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக செல்லும் நபர்கள் மூக்கை பிடித்தபடி தினமும் நடந்து செல்ல வேண்டியுள்ளது.

டிராபிக் ஜாம் ஏற்படும்போது டூவிலர் செல்வோர் பலமுறை குப்பைகளின் மேல் ஏறி வழுக்கி விழந்துள்ளனர்.

இப்பிரச்னை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதியில் சேரும் குப்பைகளை தினந்தோறும் அள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். 


செய்தி: தினகரன்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)