முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, February 5, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கீகாரம்பெறாத பள்ளிகளுக்கு நோட்டீஸ்!!

No comments :
தற்காலிக அங்கீகாரத்தை புதுப்பிக்காத 10 பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ராமநாதபுரம் நேஷனல் அகாடாமி சி.பி.எஸ்.சி.,பள்ளி,
பேராவூர் எம்.ஜி., பப்ளிக் சி.பி.எஸ்.சி.,பள்ளி,
சாயல்குடி டான் போஸ்கோ பள்ளி.,
அரியான்குண்டு அமிர்த வித்யாலயா,
பரமக்குடி கணபதி செட்டியார் வித்யாலயா,
கடலாடி மாசானா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி,
ஆர்.எஸ்.மங்கலம் அன்னை வேளாங்கண்ணி நர்சரி பிரைமரி பள்ளி,
எபினேசர் நர்சரி பிரைமரி பள்ளி,
பரமக்குடி கிருஷணநிவாஸ் நர்சரி பிரைமரி பள்ளி,
மண்டபம் பிரின்ஸ் ஆப் பீஸ் நர்சரி பிரைமரி பள்ளி


ஆகிய பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில்
நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள்
தற்காலிக அங்கீகாரம் பெறுவதற்கான உரிய நடவடிக்கையை பள்ளிகள் மேற்கொள்ளவேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளின் உரிமம் ரத்து செய்யப்படும், என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு; கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்!!

No comments :
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தரிடம் கூடுதல் கட்டணம்வசூலித்தனர்.
தை அமாவாசையான நேற்று ஒரு லட்சம் பக்தர்கள் ராமேஸ்வரம்
ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர்.

பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து கடலில் புனித நீராடினார்கள்.

பக்தர்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒரு தேங்காய், இரு சிறிய வாழைபழம், 2 ரூபாய் மதிப்புள்ள ஊதுபத்தி (இதன் அடக்கம் ரூபாய் 30) அடங்கிய பூஜை பொருள்களை பக்தரிடம் 60 ரூபாய்க்கு வியாபாரிகள் விற்றனர்.



மேலும் அக்னி தீர்த்த கரையில் உள்ளூர் புரோகிதர்கள் அனுமதியுடன் வெளியூரை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பூசாரிகள் பூஜை செய்தனர். இவர்கள் திதி, தர்பணம் பூஜைக்கு நிர்ணயித்த (ரூபாய் 400 முதல் 500 வரை) கட்டணத்தை விட ஒரு பக்தர் குடும்பத்திடம் 1000 முதல் 1500 ரூபாய் வரை வசூலித்தனர்.

அக்னி தீர்த்த கரையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து கடந்த சில மாதம் முன்பு நீதித்துறை, மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் பக்தரிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டனத்திற்குரியது என பக்தர்கள் தெரிவித்தனர்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)