முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, March 23, 2019

ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஷ்வரி வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 4 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.




ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டி.புவனேஸ்வரி (38) தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கொ.வீரராகவராவிடம் வெள்ளிக்கிழமை மனுத்தாக்கல் செய்தார். பி.எஸ்.சி வேதியியல் பட்டதாரியான இவர் திருவாடானை அருகே பட்டமங்களம் பகுதியைச் சேர்ந்தவர். அவரது கணவர் ஆர்.திருநாவுக்கரசு. இவர்களுக்கு தேவதர்ஷன், ஜனனி ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். அவர் நாம் தமிழர் கட்சியின் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி இணைச் செயலராகவும் உள்ளார். 

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரம் எம்.பி வீட்டில் சிபிஐ விசாரணை!!

No comments :
மதுரை வஃக்பு வாரியக் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் அடிப்படையில் ராமநாதபுரம் எம்.பி. ஏ.அன்வர்ராஜாவின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் குழுவினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரத்தில் உள்ள ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏ. அன்வர்ராஜா. இவர் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவராகவும் உள்ளார்.
மதுரையில் உள்ள வஃக்பு வாரியக் கல்லூரியில் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதனடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மதுரை சிபிஐ பிரிவைச் சேர்ந்த அதிகாரி கார்த்திகைசாமி, ஆய்வாளர் வேலாயுதம் ஆகியோர் கொண்ட 7 பேர் குழு அன்வர்ராஜாவிடம் விசாரணை நடத்தினர்.



சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் இவ்வழக்கு தொடர்பாக மேலும் சில ஆவணங்களில் அவரிடம் கையெழுத்து பெற்றதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.


தேர்தல் நேரத்தில் மக்களவை உறுப்பினர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு அன்வர்ராஜா கட்சி மேலிடத்தை வலியுறுத்திய நிலையில், கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்!!

No comments :
ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி சட்டப்பேரவை இடைத் தேர்தல் வேட்பாளராக எஸ்.சம்பத்குமாரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர்.




கேணிக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மைதீன் பேசுகையில், தமிழகத்தில்தான் பாஜகவுக்கு எதிராக முக்கிய கட்சிகள் இணைக்கப்பட்டு பலமான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி, அதன் மாவட்டச் செயலர் காசிநாத்துரை, காங்கிரஸ் பிரமுகர் தெய்வேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகவேல், திமுக இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சுப.த. திவாகரன், விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி கலைவேந்தன், பவானி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக திமுக நகரச் செயலர் கார்மேகம் வரவேற்றார்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)