முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 9, 2019

தமிழகத்தில் காலியாக உள்ள மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ந் தேதி இடைத்தேர்தல்!!

No comments :


2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி முதற்கட்ட தேர்தல் வருகிற 11ந் தேதி தொடங்குகிறது. தமிழக சட்டசபையின் 18  தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் இந்த தேர்தலுடன் நடத்த முடிவு  செய்யப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


இதுதவிர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகிற மே 19ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.



இதன்படி, ஏப்ரல் 22 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

ஏப்ரல் 29 வேட்பு மனு தாக்கலுக்கான இறுதி நாள்

ஏப்ரல் 30 வேட்பு மனுக்கள் பரிசீலனை மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மே 2 வேட்பு மனுக்களை திரும்ப பெற காலஅவகாசம்

மே 19ல் வாக்கு பதிவு


மே 23ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)