முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 30, 2019

மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று இராமநாதபுரம் சாதனை!!

No comments :


பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளில் ராமநாதபுரம் மாவட்டம் 98.48 தேர்ச்சி சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 8,081 மாணவர்களும், 8,289 மாணவிகளும் என மொத்தம் 16,370 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 159 பேரும், மாணவிகளில் 94 பேரும் தேர்ச்சி பெறவில்லை.

மாணவர்களின் தேர்ச்சி 98.07 சதவீதம் ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 98.88 சதவீதம் ஆகவும், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 98.48 பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.



மாவட்டத்திலுள்ள 255 பள்ளிகளில் மொத்தம் 178 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 131 அரசுப் பள்ளிகளில் மட்டும் கணக்கிடும் போது 94 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வெழுதிய அரசுப்பள்ளிகளை சேர்ந்த 5,757 மாணவ, மாணவிகளில் 5,657 பேர் தேர்ச்சி பெற்று அரசுப்பள்ளிகளில் 98.26 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.


தேர்வெழுதிய 62 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களில் 58 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;

ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)