முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, May 28, 2019

இராமநாதபுரத்தில் காவல்துறை பணிகளுக்க்கான இலவச முழு மாதிரித் தேர்வு!!

No comments :
தமிழகத்தில் காவல்துறை பணிகளுக்கு நடைபெறும் தேர்வுகளுக்கான இலவச முழு மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளதால் விருப்பமுள்ளோர் அதில் பங்கேற்கலாம் என சுரேஷ் அகாதெமி நிறுவனர் து,சுகேஷ்சாமுவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:



சுரேஷ் அகாதெமி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக ஏராளமானோர் அரசுப் பணிக்குச் செல்ல உதவியுள்ளோம்.
இந்த நிலையில், தற்போது காவல் துறையில் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. ஆகவே அத்தேர்வுக்கு தயாராகும் வகையில் வரும் ஜூன் 2 ஆம் தேதி (ஞாயிறு) தமிழகம் முழுதும் சுரேஷ் அகாதெமி சார்பில் இலவச முழு மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது.
அத்துடன் டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பதவிக்கான இலவச அறிமுக வகுப்புகளும் ஜூன் 9 ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்குகிறது. இதில் இலவச பாடக்குறிப்புகள், நடப்பு நிகழ்வுகள் வழங்கப்படும்.


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள 75503 52916 மற்றும் 75503 52917 ஆகிய செல்லிடப் பேசிகளில் தொடர்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)