முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, October 29, 2019

ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை!!

No comments :


ராமநாதபுரம் அருகே துரத்தியேந்தல் பகுதியை சேர்ந்த அமானுல்லா மகன்அமீர் உசேன் 35. இவர் நேற்று மாலை 4:00 மணிக்கு ராமநாதபுரம் ரோமன் சர்ச்ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.





அவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது இறந்து விட்டார். அமீர் உசேன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர் மீது கேணிக்கரை, பஜார், தேவிப்பட்டினம், உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்பனை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.இவர் இறந்தபோது இவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.




கஞ்சா விற்பனையில்ஏற்பட்ட தொழில் போட்டியால் கொலை நடந்திருக்கலாம். அல்லது போதை அதிகரித்து அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்தில் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த அமீர் உசேனுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.