முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 10, 2019

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காற்றின் தரத்தை பரிசோதிக்கும் கண்காணிப்பு மையம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காற்றின் தரத்தை பரிசோதிக்கும் தொடர் கண்காணிப்பு மையம் நிறுவ தமிழ்நாடு மாசுக்கட்பாட்டு வாரியம் சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பிலானஇயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.


புதுடில்லியிலும், சென்னையிலும் காற்று மாசு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம்சார்பில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் காற்று தரகண்காணிப்பு மையம் நிறுவ கருவிகள் வாங்கப்பட்டு
மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த மையத்தில் செயல்படும் கணிப்பான் கருவி மூலம் காற்று மாசு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக உள்ள வாயுக்களான சல்பர் டை-ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஓசோன்
உள்ளிட்ட வாயுக்கள் மட்டுமின்றி ஆர்செனிக்,நிக்கல், பென்சைன் போன்ற 12 வகை வாயுக்களின் அளவை அறிந்து அவற்றைதானாகவே கணினியில் பதிவு செய்யும் வகையில் இந்த மையம் செயல்படவுள்ளது.




முழுவதும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட இந்த மையத்தின் மூலம் 500 மீ., வரை காற்றின் தரத்தை பரிசோதிக்க முடியும். 24 மணி நேரமும் இயங்கும் வகையில் குளிர் சாதன வசதியும், மின்கல சேமிப்பு வசதியும் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு முறை காற்று மாசு குறித்து இந்த மையம் மூலம் கணிக்கவும், பதிவு செய்யவும் முடியும்.


இதற்கான மின்சார செலவு 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.அந்த வகையில் நவீன சாதனத்துடன் காற்று தரத்தை கண்காணிக்கும் தொடர் மையம் செயல்பட உள்ளதாகவும், டிச., மாதம் பணிகள் நிறைவடைந்து கண்காணிப்பு மையம் செயல்படும்,என அதிகாரிகள்
தெரிவித்தனர்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.