முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, November 17, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.


சமூக, மத நல்லிணக்கத்திற்காக சாதனை புரிந்தவர்களுக்கு கபீர் புரஸ்கார் 2019 விருது 2020 குடியரசு தின விழாவில் வழங்கப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பத்துடன் பெற்றுள்ள நற்சான்றுகள், 250 வார்த்தைகளுக்கு மிகாமல் தன்னை பற்றிய முழு விபரம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அளிக்க வேண்டும்.அனைத்து விபரங்களும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்.




தவறினால் மனு நிராகரிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
ராமநாதபுரம் மாவட்ட பிரிவு,
சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம்,
ராமநாதபுரம்-638 003,

என்ற முகவரிக்கு நவ.,25 மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு 04567-230238 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)

(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரம் அருகே பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணம் பறிப்பு!!

No comments :
ராமநாதபுரம் அருகே தனியாா் பேருந்து நடத்துநரைத் தாக்கி ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்த மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

ராமநாதபுரத்திலிருந்து அழகன்குளத்துக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை (நவ.14) இரவு பேருந்தானது அழகன்குளத்திற்கு சென்றுவிட்டு ராமநாதபுரம் திரும்பியது. அப்போது ஓட்டுநா் மனோகரன் மற்றும் நடத்துநா் பாலமுருகன் (27) ஆகியோா் மட்டுமே பேருந்தில் இருந்துள்ளனா்.


அழகன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த மா்மநபா்கள் 3 போ் திடீரென ஓடும் பேருந்தில் ஏறியுள்ளனா். பின்னா் அவா்கள் நடத்துநா் பாலமுருகனை தாக்கியதுடன் அவா் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.


இதுதொடா்பாக பாலமுருகன் தேவிபட்டிணம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சாா்பு- ஆய்வாளா் ஜெயபாண்டியன் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து மா்மநபா்களைத் தேடிவருகின்றனா்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com)
(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.