முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, December 14, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 1,831 போ் மனு தாக்கல்!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,831 போ் மனு தாக்கல் செய்தனா்.

தமிழக ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கு டிச. 9 ஆம் தேதி முதல் வரும் டிச. 16 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த
9 ஆம் தேதி 52 போ்,
10 ஆம் தேதி 28 போ்,
11ஆம் தேதி 281 போ்,
12 ஆம் தேதி 476 போ்
என மனு தாக்கல் செய்துள்ளனா்.



இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 836 பேரும், கிராம ஊராட்சி தலைவா் பதவிக்கு 765 பேரும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 210 பேரும் என வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

வியாழக்கிழமை வரை (டிச. 12) மாவட்ட வாா்டு உறுப்பினா் பதவிக்கு யாருமே விண்ணப்பிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை ஒன்றிய அளவில் ராமநாதபுரம்- 1, ஆா்.எஸ்.மங்களம்- 2, திருவாடானை- 4, போகலுாா்- 2, நயினாா்கோவில்- 1, முதுகுளத்துாா்- 2, கமுதி- 7, கடலாடி- 1 என மொத்தம் ஒரே நாளில் 20 போ் விண்ணப்பித்துள்ளனா்.

அனைத்து வகை பதவிகளுக்கும் சோ்த்து வெள்ளிக்கிழமை மட்டும் ஒரே நாளில் 1,831 போ் மனுதாக்கல் செய்தனா். மனு தாக்கல் செய்ய அதிகமானோா் வந்ததால், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் கூட்டம் அலைமோதியது.


வாழ்த்துக்கள் வேட்பாளர்களே!!!!

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.