(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 3, 2020

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் காட்சிப் பொருளாக பேட்டரி கார்!!

No comments :
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷனில் பேட்டரி கார் இயக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் ரயிலில் ஏற முடியாமல் தவிக்கின்றனர்.


இங்கு பயணிகள் வசதிக்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இந்த கார் வழங்கப்பட்டது. இதில் பேட்டரி பழுதால் கடந்த ஏழு மாதங்களாகஇயக்கப்படாமல் உள்ளது.


இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரயில் பெட்டிகளில் ஏறுவதற்குமிகவும் சிரமப்படுகின்றனர்.பேட்டரி பழுதை நீக்கி பயணிகளுக்கு பயன்படும் விதத்தில் செயல்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஏழு மாதங்களாக பயன்பாடின்றி காட்சிப் பொருளாக துருப்பிடித்து வீணாகும் அவல நிலை உள்ளது.


ரயில்வே கோட்ட முதுநிலைவணிக மேலாளர் பிரசன்னா கூறுகையில், தமிழக சுற்றுலாவளர்ச்சி கழகம் சார்பில் வழங்கப்பட்ட பேட்டரி கார் பேட்டரி பழுதால் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து பயணிகளுக்காக இயக்கப்படும், என்றார்.

செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment