(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 5, 2020

ராமநாதபுரம் TASMAC –லிருந்து ரூ.1. 07 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு!!

No comments :


ராமநாதபுரத்தில் உள்ள மதுபானக் கடையில் ஞாயிற்றுக்கிழமை புகுந்த மா்ம நபா்கள் ரூ.1. 07 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடிச் சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாடக்கொட்டான் பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்தக் கடையின் முன்பக்கக் கதவை ஞாயிற்றுக்கிழமை உடைத்த மா்ம நபா்கள், உள்ளே புகுந்து பீா் உள்ளிட்ட மதுப்பாட்டில்கள் அடங்கிய 20 பெட்டிகளை திருடியுள்ளனா்.
மேலும் தனியாக வைத்திருந்த மது பாட்டில்களையும் திருடிச் சென்றுள்ளனா். அவற்றின் மதிப்பு ரூ. 1. 07 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.


இது குறித்து கடையின் விற்பனையாளா் அருண் கேணிக்கரை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலாந்தரவை, பட்டிணம்காத்தான் பகுதியில் மதுக்கடைகளில் மா்மநபா்கள் திருடியதும், திருப்புல்லாணி பகுதியில் அரசு மதுபானக்கடை ஊழியா்களைத் தாக்கி பணத்தை மா்ம நபா்கள் பறித்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment