(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 28, 2020

ராமநாதபுரம் அருகே முகநூலில் சமூக அவதூறு பதிவிட்டதாக இளைஞர் கைது!!

No comments :
ராமநாதபுரம் அருகே சமூக அவதூறு கருத்துகளை முகநூலில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் வி.முத்துராஜ் (26). இவர் கடந்த 3 ஆம் தேதி முதல் தொடர்ந்து தனது முகநூலில் குறிப்பிட்ட அமைப்பு குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்ததாக புகார் எழுந்தது.



இதையடுத்து அவர் மீது மண்டபம் காவல் நிலைய சார்பு -ஆய்வாளர் முத்துமுனியசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸார், முத்துராஜை கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலைய பிணையிலே விடுவிக்கப்பட்டதாக போலீஸார் கூறினர்.


செய்தி: தினசரிகள்

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment