(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, June 29, 2020

சாயல்குடி அருகே கோயில் சிலைகளை உடைத்தவர் கைது!!

No comments :
சாயல்குடி அருகே கோயிலில் உள்ள சிலைகளை உடைத்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

சாயல்குடி அருகேயுள்ள எஸ்.கீரந்தை கிராமத்தில் அழகர் மலையான் கோயில் உள்ளது.

இந்த கோயில் வளாகத்தில் இருந்த பிள்ளையார், ராக்காச்சி அம்மன், கருப்பணசாமி ஆகிய சிலைகளை மர்ம நபர் உடைத்து சேதப்படுத்திவிட்டு, தலைமறைவாகி விட்டார்.



இதுகுறித்து கிராமத் தலைவர்சந்திரசேகர் சாயல்குடி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் சாயல்குடி துரைச்சாமிபுரத்தைச் சேர்ந்த ரிஷி முனியசாமி (35) என்பவர் மது போதையில் கோயில் சிலைகளை உடைத்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.


செய்தி: தினமணி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment