(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, August 18, 2020

மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்!!

No comments :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தில் (பேட்டரி) இயங்கும் சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயலிழந்தவர்களுக்கு மின்கலத்தில் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன. இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். இரண்டு கால்களும் செயலிழந்து, இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கர பெட்ரோல் வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

 

கல்வி பயிலுவோர், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் சுயதொழில் புரிவோரும், இத்திட்டத்தின் மூலம் ஏற்கெனவே பயன்பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

 

இதேபோல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட தாய்மார்கள் வருமானம் ஈட்டும் வகையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளன.

 

ஆகவே, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.in) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

No comments :

Post a Comment