முகவை முரசு

(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, January 21, 2020

குலசேகரக்கால் கண்மாயில் தேங்கிய தண்ணீரில் சீமைகருவேலமரத்தால் பாதிப்பு!!

No comments :

இராமநாதபுரம் ஒன்றியம் சித்தார் கோட்டை அருகே உள்ள குலசேகரக்கால் கிராம கண்மய்கள் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய் நிரம்பியும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் தண்ணீரில் பாதிப்பு ஏர்பட்டுல்லது.


இது குறித்து  தினேஷ் (
மக்கள் பாதை) கூறியதாவது:


சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் குலசேகரக்கால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் தண்ணீரை வெளியேற்ற தண்ணீர் வரத்து கால்வாய் வழியாக கண்மாய்க்கு சென்றதால் இக் கண்மய்கள் நிரம்பிவிட்டன ஆனால் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் மக்கள் குளிக்க பயன்படுத்த முடிய வில்லை குளிக்கும் போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது தண்ணீரின் நிறம் மாறி கருப்பாக காட்சியளிக்கிறது.





மழைக்கு முன்பு சீமைகருவேல மரங்களை அகற்றியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் ஆனால் அதிகரிகளுக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

இனியேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா, பொறுத்திருந்து பார்ப்போம்.

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.

ராமநாதபுரத்தில் போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடி, ஒருவர் கைது!!

No comments :
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் திருநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் முனியசாமி (வயது 27). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்தார். அப்போது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாராம்.

இந்த நிலையில் முனியசாமி தான் மீண்டும் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து விட்டதாக கூறி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற சான்று ஒன்றை காட்டி பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாராம்.



இதுதவிர தன்னை ஒரு காவல் அதிகாரி போன்று சித்தரித்துக்கொண்டு மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் நின்று வாகன சோதனை செய்ததுடன், வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்த்து, அவர்களை கண்டிப்பது போன்ற தகாத செயல்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை என்ற சான்றினை தயாரித்து அதன் அடிப்படையில் வணிக வளாகங்கள், விற்பனை மையங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தி வந்தாராம். போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்தது பற்றி தகவலறிந்த மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராக்லண்ட் மதுரம், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் மோசடி வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


செய்தி: தினத்தந்தி

(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.